ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
#SriLanka
#Sea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வானிலை ஆய்வு மையம் 'அம்பர்' (Amber) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது..
குறிப்பிட்ட கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே