இலங்கை - இந்தியாவிற்கு இடையில் கையெழுத்தாகும் 03 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
#India
#SriLanka
#Deal
#Vijitha Herath
#Rajnath Singh
Thamilini
2 hours ago
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இன்று 03 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் விஜித்த ஹேரத் அறிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி , இலங்கை மற்றும் இந்திய மாணவர் குழுக்களுக்கு இடையேயான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் இந்திய பாதுகாப்பு அகாடமிக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், மற்றும் கடந்த காலத்தில் இந்திய அரசாங்கத்தால் நாட்டிற்கு வழங்கப்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களின் இலவச பராமரிப்புக்கான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே