இலங்கை இலக்கியத் துறையை வளப்படுத்திய படைப்பாளிகளுக்கு அரச விருது!
இலங்கை இலக்கியத் துறைக்கு சிறப்பான பங்களிப்புகளை வழங்கிய எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் அரச இலக்கிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அரச இலக்கிய விருது வழங்கும் விழா இன்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியப் பணியாற்றி நாட்டின் இலக்கியத் துறைக்கு சிறப்பான சேவையாற்றிய மூன்று படைப்பாளிகளுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் “சாஹித்யரத்ன” கௌரவ விருதும் வழங்கப்பட்டது.
திறமையான படைப்பாளிகளை கௌரவிப்பதன் மூலம் இலக்கியத் துறையில் புதிய எழுச்சியை ஏற்படுத்தி, ரசனை மற்றும் ஒத்துணர்வுடன் கூடிய கலாசார சமூகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச இலக்கிய விருதுகளால் கௌரவிக்கப்பட்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே