நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது.

#Death #world_news #LANKA4 #Nepal #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
54 minutes ago
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது.

நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் மேலும் 4,462 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் மாத்திரம் 987 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,916 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, சீனாவில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 546 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும் மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4