2028ம் ஆண்டுக்குள் ராணுவ ட்ரோன் படைப்பிரிவை நிறுவ திட்டமிடும் சுவிட்சர்லாந்து
#SWITZERLAND
#LANKA4
#technology
#Drone
#Military
#L4
Prasu
6 hours ago
ஐரோப்பா முழுவதும் மறு ஆயுதமயமாக்கல் போக்கு நிலவி வரும் நிலையில், சுவிட்சர்லாந்து ஒரு இராணுவ ட்ரோன் பட்டாலியனை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கமைய “2028 முதல், இராணுவம் தனது சொந்த ட்ரோன் பட்டாலியனை உளவு, செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டாலியனுக்கு ஒரு சிறப்பு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம் ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸுக்கான ஒரு சிவிலியன்-இராணுவ மையத்திற்கான திட்டங்களை அமைச்சகம் கோடிட்டுக் காட்டியது. இது ஒரு தொழில்நுட்ப மையம் மற்றும் ஒரு இராணுவக் கட்டளை மையத்தைக் கொண்டிருக்கும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே