குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: கண்ணீர்புகை பிரயோகம்!

#SriLanka #Prison #Ratnapura #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
49 minutes ago
குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: கண்ணீர்புகை பிரயோகம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (07) காலை மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுவதுடன், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றிரவும் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், அது பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4