தாய்மொழி தெரியாதது அவமானம் - மாணவர்கள் தமிழ் கற்க அழைப்பு விடுத்த நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், தாய்மொழி தெரியாமல் இருப்பது ஒரு "அவமானம்" என்று கூறி, தமிழகத்தில் மொழி விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளார்.
சென்னையில் உள்ள தனது பழைய பள்ளியான தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களிடையே பேசிய அவர், தமிழ் தெரியாததை ஒருபோதும் பெருமையாகக் கருதக்கூடாது என்றும், தங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்ளுமாறும் அவர்களை வலியுறுத்தினார்.
"நான் இங்கு படித்துக்கொண்டிருந்தபோது, என்னால் ஆங்கிலம் நன்றாகப் பேச முடியவில்லை. நான் 'Why did he went' என்பது போலத்தான் ஆங்கிலம் பேசுவேன். ஆனால் என்னால் தமிழ் நன்றாகப் பேச முடிந்தது.
ஆனால் இப்போது அது மாறிவிட்டது. நான் சந்திக்கும் பத்து பேரில், எட்டு பேருக்குத் தமிழ் படிக்கவோ எழுதவோ தெரியாது.
அவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்; ஆங்கிலம் எழுதுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தமிழ் படிக்கவோ எழுதவோ தெரியாது.
இது மிகவும் விரக்தியளிக்கும் விஷயம்," என்று அவர் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் தமிழில் உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்..
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே