ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 600இற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம்!
ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 624 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில், 417 பேர் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி'யில் ஈடுபட்டவர்கள் என்றும், 207 பேர் "வெளிநாட்டு நடவடிக்கைகளில்" ஈடுபட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவும் ஈரானும் ஏப்ரல் மாதம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, ஜூன் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, ஆனால் இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
பென்டகன் சமீபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தனது தரவுகளைத் திருத்தியுள்ளது, இது வெளிப்படைத்தன்மை இல்லாத செயல் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜெனரல்களும் காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்த நிர்வாகம் போர் குறித்து நேர்மையாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே