இலங்கையில் கிரிக்கெட்டை மேம்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!
#SriLanka
#Meeting
#Srilanka Cricket
#AnuraKumaraDissanayake
#NPP
Soruban
2 hours ago
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மறுசீரமைப்புக் குழுவினருடன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில், இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படக்கூடிய ஆதரவுகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே