எதிர்கட்சியினர் என்னதான் கூறினாலும் மக்கள் ஜனாதிபதி பக்கமே உள்ளனர் - பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்

#SriLanka #people #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Opposition party
Thamilini
1 hour ago
எதிர்கட்சியினர் என்னதான் கூறினாலும் மக்கள் ஜனாதிபதி பக்கமே உள்ளனர் - பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்

எதிர்க்கட்சி என்ன சொன்னாலும், நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்துடனேயே உள்ளனர் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். 

 ஹட்டன் நகரில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  சமீபத்தில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சி குழப்பத்தில் உள்ளன என்பது தெளிவாகிறது என்றும், அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு வலுவான எதிர்க்கட்சியை நிறுவ தேவையான நடவடிக்கைகளையும் பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமெனவும் குறிப்பிட்டார். 

அத்துடன் மக்களை மடையர்களாக்கி தன்னை நகைச்சுவை நபர் போல் நிரூபிக்காமல் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் சபையில் இருப்பவர்கள், பிணையில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளில் ஈடுபட்டவர்களால் எதிர்க்கட்சி இன்று சூழப்பட்டுள்ளது என்று விமர்சித்த அவர், நாட்டின் மக்கள் குடியரசுத் தலைவருடனும் அரசாங்கத்துடனும் இருக்கிறார்கள் என்றும், அவர்களில் 94.4 வீதம் தொழிலாளர்களே என்றும் கூறினார். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4