நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைபொழிவு அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைபொழிவு சிறிதளவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டளவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என அது கூறியுள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின்மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத் துறை மேலும் தெரிவித்துள்ளது.
மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே