நெதன்யாகுவின் கைது தொடர்பில் பேசிய மம்தானி : சமூகங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டுவதாக குற்றச்சாட்டு!!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க்குக்கு வந்தால் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்ற வேண்டும் என நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ள நிலையில், அதற்கு நெதன்யாகு பதிலளித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் சண்டே நிகழ்ச்சியில் பேசிய நெதன்யாகு, நகரத்தில் உள்ள யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைவருக்கும் சேவை செய்யும் மேயர் என்ற தனது கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, வெறுப்பைத் தூண்டுவதாக மம்தானி மீது அவர் குற்றம் சாட்டினார்.
மாறாக, மம்தானி சமூகங்களை ஒன்றுக்கொன்று எதிராகத் தூண்டிவிட்டு, அச்சத்தைப் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள யூத அமெரிக்கர்கள், தாங்கள் தற்போது உண்மையாகவே அச்சமாக உணர்வதாகத் தன்னிடம் தொடர்ந்து கூறுவதாகவும் நெதன்யாகு சுட்டிக்காட்டினார்.
. இஸ்ரேலுக்கும் தனக்கும் எதிராக மம்தானி வெறுப்புப் பேச்சு பேசியதாக அவர் விவரித்ததற்குச் சரியாக ஒரு நாள் கழித்து, யூத வழிபாட்டுத் தலத்திலிருந்து வெளியே வந்த யூதர் ஒருவர் மீதான தாக்குதல் நடந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே