100 ஆண்டுகள் பாரம்பரியம்! கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பிரம்மாண்ட நடைபவனி
கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நடைபவனி உற்சாகமாக நடைபெற்றது.
நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நடைபவனியில், கல்லூரியின் 100 ஆண்டுகால கல்விச் சேவை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் பதாகைகள் மற்றும் கொடிகளுடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நடைபவனியின் போது பழைய மாணவர்கள் தங்களது பள்ளி நினைவுகளைப் பகிர்ந்ததுடன், கல்லூரியின் வளர்ச்சிக்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த உறுதியும் வெளிப்படுத்தினர்.
நிகழ்வில் பல்வேறு சமூகப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து நூற்றாண்டு விழாவை சிறப்பித்தனர்.
கிளிநொச்சி மத்திய கல்லூரியின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் தொடர் நிகழ்வுகளில் இந்த பிரம்மாண்ட நடைபவனியும் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே