மத்தியக் கிழக்கில் உருவாகும் அணு ஆயுதப் போட்டி - கொந்தளிக்கும் இஸ்ரேல்!
அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் கூறுகிறார்.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, மத்திய கிழக்கில் ஒரு புதிய அணு ஆயுதப் போட்டி உருவாகும் ஆபத்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சவூதி அரேபியா அமெரிக்க தொழில்நுட்பத்தின் உதவியுடன் அணு உலைகளைக் கட்டவும் யுரேனியத்தைச் செறிவூட்டவும் அனுமதிக்கப்படும்.
இந்த ஒப்பந்தம், சவூதி அரேபியா அமைதியான நோக்கங்களுக்காக ஒரு குடிசார் அணுசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவும், அவரது அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களும் இந்த ஒப்பந்தம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே