கிழக்கு மாகாணம் மற்றும் அதனை அண்டிய மாவட்டங்களில் உச்சம் தொடும் வெப்பநிலை!
#SriLanka
#Warning
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Heat wave
Thamilini
4 hours ago
கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளைய தினம் (24) பகல் நேரத்தில் கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரதிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வெப்பக் குறியீட்டு முன்னறிவிப்பானது, சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது என்றும், இது உங்கள் உடலில் உணரப்படும் நிலை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே