பற்றி எரியும் கப்பல்கள் எச்சரிக்கும் டிரம்ப்!
தென் அமெரிக்க நாடான கயானாவில் 179 பயணிகளுடன் சென்ற சிறிய ரகக் கப்பல் ஒன்று நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், இதுவரை 27 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள கயானாவின் தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து 'பரிமா வைனி' நகரை நோக்கி கடந்த 18 ஆம் திகதி சிறிய ரகக் கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.
பயணித்துக் கொண்டிருந்தபோதே, எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் கப்பல் திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், கடலில் தவித்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 69 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இருப்பினும், மாயமான எஞ்சிய 110 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது வரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்னும் காணாமல்போயுள்ள 83 பேரையும் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே