நாடுபூராகவும் 1000மில்லியன் ரூபா செலவில் 887கிராமிய பாலங்கள்.
நாடுபூராகவும் 1000மில்லியன் ரூபா செலவில் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றைய தினம் 107கிராமிய பாலம் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குற்பட்ட புலோப்பளை ஊடாக செல்வபுரம் செல்லும் வீதியில் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் இரண்டு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது .
தொடர்ந்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குற்பட்ட கிளாலி பாடசாலை ஊடாக கடற்கரை செல்லும் வீதியில் 1.2மில்லியன் ரூபா செலவில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே