ஜனநாயத்திற்கு விழும் மரண அடி : நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து சாகர காரியவசம் பாய்ச்சல்!
#SriLanka
#Judge
#Sagara_Kariyawasam
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பதற்கு இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் நாட்டின் ஜனநாயகத்திற்கு விழுந்த மரண அடியாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முயற்சியை தோற்கடிக்க சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில், மேற்படி தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், நமது தாய்நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில், அதற்கு எதிராக என்னென்ன அச்சுறுத்தல்களும் தாக்கங்களும் ஏற்பட்டாலும், அதற்காக முன்நிற்போம் என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அதிகபட்ச அர்ப்பணிப்பைச் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே