தற்கொலைக்கு எதிராக இந்திய மாற்றுத்திறனாளி இளைஞன் முன்னெடுத்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம்
தற்கொலைக்கு எதிராக இந்திய மாற்றுத்திறனாளி இளைஞன் முன்னெடுத்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி இன்று ஆரம்பமானது.
தற்கொலை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த கமின் மொன்சாரி என்ற இளைஞன் குறித்த விழிப்புணர்வு பயனத்தை முன்னெடுத்து வருகிறார்.
தொலைபேசி பயன்பாட்டினால் பல்வேறு வகையான கொலைகள் தற்கொலைகள் இடம் பெறுவதை கண்டித்தும், இதிலிருந்து தற்போதைய சமூதாயம் மீண்டெழ வேண்டுமென வலியுறுத்தியும் இந்தியாவில் பல பகுதிகளில் துவிச்சக்கர வண்டி மூலம் பயணித்துள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை 65,000 கிலோ மீட்டர் வரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் தற்பொழுது தற்பொழுது சகோதர நாடான இலங்கைக்கு வருகை தந்து இலங்கை முழுவதும் சைக்கிளில் பயணித்து தொலைபேசி பயன்பாட்டினால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் விபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் குறித்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே