சரண குணவர்தனவிற்கு சிறைச்சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி!
#SriLanka
#Prison
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
தற்போது சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன, வெலிக்கடை சிறைச்சாலையின் அலுவலகங்களைத் தூய்மைப்படுத்தும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சிறை வளாகத்தில் உள்ள நூலகம் மற்றும் ஆவணக் காப்பகம் போன்ற அலுவலகங்களைத் தூய்மைப்படுத்தும் பணியில் முன்னாள் அமைச்சர் ஈடுபட்டுள்ளார் என்பதையும் அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
மேலும், முன்னாள் அமைச்சர் சிறை அதிகாரிகளுடனும் மற்ற கைதிகளுடனும் மிகவும் நட்பாகப் பழகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே