மான்ட்ரியல் துப்பாக்கிச்சூடு - குற்றவாளி 25 வயது இளைஞர் என கண்டுபிடிப்பு
மான்ட்ரியலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒரு காவல்துறை அதிகாரியும் ஒரு வழிப்போக்கரும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சந்தேக நபர், ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 25 வயது இளைஞர் என கியூபெக் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
ஆல்பர்ட்டாவின் லெத்பிரிட்ஜைச் சேர்ந்த சேத் ஹாட்ஃபீல்ட், கோட்-டெஸ்-நெய்ஜஸ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறை ஜன்னலிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குற்றவாளி ஒரு மாணவர் என்பதை லெத்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உறுதிசெய்ததுடன், இந்த விசாரணைக்கு பல்கலைக்கழகம் ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி 34 வயதான முகமது லமின் பென்ரடூவான் என்றும் கொல்லப்பட்ட குடியிருப்புவாசி 64 வயதான மைக்கேல் மிஸ்ராஹி என்றும் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே