கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு!

#SriLanka #water #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின்  புறநகர்ப் பகுதிகளில் இன்று (24)  24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

தேசிய வடிகால் அமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, பதுக்கா, ஹோமகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு ஏற்படும் என்றும், மகாரகம பகுதிக்கு குறைந்த அழுத்த நிலையில் நீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

களட்டுவாவாவிலிருந்து பொரளஸ்கமுவாவிற்கு நீர் வழங்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்கு வசதியாக இந்த நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4