உத்தரப்பிரதேசத்தில் இயங்கிவந்த பயிற்சி மையத்தில் தீவிபத்து - 10இற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழப்பு!

#India #SriLanka #Accident #fire #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
உத்தரப்பிரதேசத்தில் இயங்கிவந்த பயிற்சி மையத்தில் தீவிபத்து -  10இற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பயிற்சி மையம் இயங்கி வந்த கட்டிடம் ஒன்றில்  நேற்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 தீ விபத்து ஏற்பட்டபோது, ​​ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட நிலையில் பல மாணவர்கள் தற்காத்துக்கொள்ளும் நோக்கில் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.

 சுமார் ஒரு மணிநேரம் போராடிய பின் தீ அணைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் இடிபாடுகளில் இருந்து 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதேநேரம் கட்டிடத்தில் இருந்து குதித்து  காயமடைந்த பலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4