அமெரிக்காவில் 140க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டிய கனேடிய நபருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக 145க்கும் மேற்பட்ட சிறுவர்களை இணையவழியில் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டொராண்டோவைச் சேர்ந்த நபருக்கு, அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிறைத்தண்டனை முடிவடைந்த பிறகு, அவர் 10 ஆண்டுகள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கனடாவில் அவர் ஏற்கனவே அனுபவித்து வரும் 12 ஆண்டு சிறைத்தண்டனையுடன் இந்த புதிய தண்டனையும் தொடர்ச்சியாகச் சேர்க்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
டொராண்டோ காவல்துறையினர் 40 வயது ரமணன் பத்மநாதனைக் கைது செய்து, 93 பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். அடுத்த ஆண்டே அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். சிறுவர் ஆபாசப் படம் தயாரித்தல் மற்றும் சிறுவர்களை வற்புறுத்தி தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
(வீடியோ இங்கே )