கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் மரணம்
#Death
#Attack
#Israel
#War
#Lanka4
#Lebanon
#L4
Prasu
3 hours ago
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கிழக்கு லெபனானில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 15 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள மஷ்கரா கிராமத்தின் மீது இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக லெபனானின் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மஷ்கரா மற்றும் சஹ்மர் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )