சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 82 பேர் உயிரிழப்பு
#China
#Death
#Lanka4
#Coal
#Blast
#Mine
#Workers
Prasu
3 hours ago
வடக்கு சீனாவில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 82 பேர் உயிரிழந்ததாகவும் இருவரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக குறைந்தது 90 பேர் உயிரிழந்ததாகக் கூறியிருந்த மீட்புப் பணியாளர்கள், தற்போது வெளியிட்ட ஒரு புதுப்பிப்பில் இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர்.
ஷான்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த எரிவாயு வெடிப்பு, 2009ம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் நடந்த மிக மோசமான சுரங்கப் பேரழிவாகும்.
இந்த வெடிப்பு நிகழ்ந்தபோது, 247 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )