ரூபாய் நெருக்கடி : நிலமை மோசமடைவதற்கு முன்பு உடனடி நடவடிக்கை தேவை!! சஜித் வலியுறுத்து!
#SriLanka
#Parliament
#Sajith Premadasa
#Dollar
#Debate
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
தற்போது நிலவும் ரூபாய் நெருக்கடி குறித்து அவசர பாராளுமன்ற விவாதம் நடத்தக் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை நேற்று சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரூபாய் "மிகப்பெரிய அழுத்தத்தில்" இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிலைமையைச் சமாளிக்க தற்போது தெளிவான பதில்களோ அல்லது திட்டங்களோ இல்லை என்றும் அவர் கூறினார்.
நிலைமை மோசமடைவதற்கு முன்பு, பொதுமக்களுக்கு நேர்மையும் உடனடி நடவடிக்கையும் தேவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )