ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 20இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள்!
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் ஈடுபட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பிச் சென்ற இருபதிற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நேற்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு மோதல் மண்டலங்களில் இருந்து ட்ரோன் காட்சிகள், ஏவுகணை தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை தங்கள் கைபேசிகளில் வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்தக் குழுவினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் இரண்டு பெண்களும், 19 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் நேற்று காலை ஏர்ஏசியா G9-587 மற்றும் G9-502 விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இருப்பினும் கடுமையான மழை காரணமாக விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
அங்கு தரையிறங்கிய சந்தேகநபர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CarrID) அதிகாரிகள் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து அந்த குழுவினர் காவல் துறையினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )