விஜய் தமிழ் மக்களின் சார்பாகக் குரல் எழுப்ப வேண்டும் - அர்ச்சுனா வலியுறுத்து!

#SriLanka #Tamil Nadu #Vijay #ADDA #Archuna #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 weeks ago
விஜய் தமிழ் மக்களின் சார்பாகக் குரல் எழுப்ப வேண்டும் - அர்ச்சுனா வலியுறுத்து!

தமிழக முதலமைச்சர் தமிழ் மக்களின் சார்பாகக் குரல் எழுப்ப வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜையை சந்திக்க சென்னை சென்றுள்ள அவர், தற்போது அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்துள்ளார். 

இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், முதலமைச்சர் விஜயை என்னால் சந்திக்க முடியும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பதை நேரில் காண வேண்டும் என்ற பெரும் ஆசை எனக்கு இருந்தது. 

இருப்பினும், அந்த நேரத்தில் நான் இலங்கை நாடாளுமன்றத்தில் மும்முரமாக இருந்ததால், என்னால் அதைக் காண முடியவில்லை. தமிழக மக்கள் இந்த முறை ஒரு வரலாற்று அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். 

அத்தகைய மாற்றம் நிகழாது என்று வலுவான அரசியல் விமர்சகர்கள் கூறினர். ஆனால், அத்தகைய மாற்றம் நிகழும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்," என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4