மத்திய லண்டனில் நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்

#Protest #people #government #Lanka4 #London #England
Prasu
4 weeks ago
மத்திய லண்டனில் நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்

மத்திய லண்டனில் டாமி ராபின்சன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக வெளிநாடுகளில் உள்ள 11 தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள் நாட்டிற்குள் நுழைவதை இங்கிலாந்து அரசாங்கம் தடை செய்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்கள் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதித்துள்ளதுடன் அத்தகைய நபர்கள் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாகவும் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் குறிப்பிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்டதாகக் கூறும் நபர்களில் போலந்து அரசியல்வாதி, பெல்ஜிய அரசியல்வாதி, இஸ்லாமிய எதிர்ப்பு செல்வாக்கு செலுத்துபவர், அமெரிக்க வர்ணனையாளர் மற்றும் டச்சு குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் ஆகியோர் அடங்குவர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4