கனடாவில் அமுலாகும் புதிய சட்டம் - மீறினால் 3000 டாலர்கள் வரை அபராதம்

#Canada #Law #Lanka4 #Animal #Natural #Fined
Prasu
4 weeks ago
கனடாவில் அமுலாகும் புதிய சட்டம் - மீறினால் 3000 டாலர்கள் வரை அபராதம்

கனடாவின் வசாகா பீச் பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள பைப்பிங் பிளவர் (Piping Plover) பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைத் கொடுமை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை நகர சபை அமல்படுத்தியுள்ளது.

வனவிலங்குகளைத் துன்புறுத்துதல் அல்லது தொந்தரவு செய்தால் 3000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாவரங்கள் அல்லது இயற்கை வளங்களுக்குச் சேதம் விளைவித்தால் 2500 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கைப் பலகைகளை மதிக்காமல் நடந்துகொண்டால் 2000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட கடற்கரை பகுதிகளுக்குள் நுழைதலுக்கு 900 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4