வளிமண்டலத்தில் தாழமுக்கம்: வடக்கு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடும் மழை எச்சரிக்கை!
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாட்டின் பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அதீத மழைக்கான 'அம்பர்' (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
200 மி.மீ இற்கும் அதிகமான மழை: மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும்.
100 மி.மீ அளவிலான மழை: வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, குருநாகல் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிக மழை பதிவான இடங்கள் (கடந்த 24 மணிநேரத்தில்):
கெஸ்பேவ (கொழும்பு): 204.0 மி.மீ
வேயங்கொடை (கம்பஹா): 145.5 மி.மீ
கிலிமலே (இரத்தினபுரி): 121.0 மி.மீ
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )