சிலையில் தொங்கிய நிலையில் துண்டிக்கப்பட்ட தலை மீட்பு!
அம்பலாங்கொடை, மாமண்டல பகுதியில் உள்ள சிலை ஒன்றில் மனிதத் தலை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று காலை மாமண்டல சந்திப்பிற்கு அருகில் உள்ள சிலை ஒன்றில், கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மனிதத் தலை ஒன்று தொங்கவிடப்பட்டிருப்பதை வழிப்போக்கர்கள் கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிசாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சிலையில் தொங்கவிடப்பட்டிருந்த தலையை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்ற விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
தனிப்பட்ட பகை காரணமாகவோ அல்லது பாதாள உலகக் குழுக்களின் எச்சரிக்கையாகவோ இந்தச் கொடூரச் செயல் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் உடல் எங்கே உள்ளது என்பது குறித்தும், கொலையாளிகளைக் கண்டறியவும் அம்பலாங்கொடை பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் காரணமாக மாமண்டல பகுதியில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )