“புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது” : முதலமைச்சர் விஜய்க்கு சஜித் வாழ்த்து!
தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜயா பதவியேற்றதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழகத்திற்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்க வாழ்த்துவதாகக் கூறினார்.
"கோபம் மற்றும் பழைய காயங்களின் அடிப்படையில் மட்டுமே கட்டப்பட்ட சமூகங்கள் இறுதியில் தனிமைப்படுத்தப்படுகின்றன என்பதையும், நீதி மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட சமூகங்கள் மக்கள் உண்மையாக விரும்பும் ஒரு எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்பதையும் வரலாறு காட்டியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.
"உலகம் தற்போது பிளவுபட்டுள்ளது. மொழி, மதம் அல்லது அடையாளம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், இப்பகுதி மக்கள் உண்மையாக விரும்புவது சமூக முன்னேற்றம், நீதி மற்றும் ஸ்திரத்தன்மையே ஆகும்."
மற்றவர்கள் தங்களைத் தூரப்படுத்திக் கொண்ட இடத்தில், புரிதலைக் கட்டியெழுப்பத் தேவையான முன்னேற்றம், கருணை மற்றும் ஞானத்தை இந்த புதிய அத்தியாயம் கொண்டு வரும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )