மாத்தறை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
#SriLanka
#news
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
மாத்தறை – கிரிந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொடெல்ல கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (8) மாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் குறித்த சடலம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், சுமார் 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும், பழுப்பு நிற ஆடை அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது திஸ்ஸமஹாராம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிரிந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )