கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல் - உயர்நீதிமன்றம் உத்தரவு
#SriLanka
#Gotabaya Rajapaksa
#Court
#Former President
Soruban
1 hour ago
அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவின் ஒரு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி 'அரகலய' போராட்டக்களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைகளின் போது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட அல்லது சேதமடைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவிரோதமான முறையில் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.