ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மோசடி வழக்கு - முன்னால் CEO தற்கொலை!
#SriLanka
#Airlines
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது.
பிணை நிபந்தனைகளை மீறி அவர் செயற்பட்டமை கண்டறியப்பட்தை தொடர்ந்து அவரை மீளவும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில கொள்ளுப்பிடியவில் உள்ள வீட்டில் அவருடைய சடலம் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )