சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல் - தேரர் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
Thamilini
2 hours ago
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறைத் தலைவர் (IGP) பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல்கள் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், மதத் துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜங்கனே சத்தரத்ன தேரரே குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 ஏப்ரல் 2 ஆம் திகதி, ஸ்ரீலங்கா ராமன்ன மகா நிகாயத்தின் செயற்குழு, வணக்கத்துக்குரிய ராஜங்கனே சத்தரத்ன தேரரை சங்கத்திலிருந்து நீக்கத் தீர்மானித்தது.
(வீடியோ இங்கே )