கட்டுநாயக்காவிலிருந்து கஹவத்தை சென்ற வாகனம் விபத்து!!

#SriLanka #Accident #Lanka4 #vehicle #Katunayaka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
கட்டுநாயக்காவிலிருந்து கஹவத்தை சென்ற வாகனம் விபத்து!!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கஹவத்தை நோக்கிப் பயணித்த சிற்றூர்தி (Van) ஒன்று, இன்று அதிகாலை இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள களு கங்கை பாலத்தில் பாரிய விபத்துக்குள்ளானது.

பாலத்தின் பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு வாகனம் களு கங்கைக்குள் வீழ்ந்திருக்கக்கூடிய அபாயம் காணப்பட்ட போதிலும், நல்வாய்ப்பாகப் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

வாகனத்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அதிகாலை வேளையில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் அல்லது வேகக் கட்டுப்பாட்டை இழந்தமை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து காரணமாக இரத்தினபுரி - களு கங்கை பாலத்தின் ஊடான போக்குவரத்து இன்று காலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டுநாயக்காவிலிருந்து தொலைதூரப் பயணங்களை மேற்கொள்பவர்கள், குறிப்பாக அதிகாலை வேளைகளில் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4