அமெரிக்காவின் 'Project Freedom' திட்டத்திற்கு தென்கொரியா ஆதரவு!
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அமெரிக்காவின் திட்டத்தில் இணைவதில் தென் கொரியா குறிப்பாக ஆர்வம் காட்டி வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல்வழிப் பாதைகளில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அனைத்து நாடுகளின் பொது நலனுக்கும் உகந்தது என்றும், அது சர்வதேச சட்டத்தின்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தென் கொரிய அரசாங்கம் வலியுறுத்துகிறது.
அமெரிக்க இராணுவம் கடந்த திங்கட்கிழமை ' Project Freedom' ' என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் முக்கிய கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பு குறித்து தென் கொரியாவும் அமெரிக்காவும் நெருக்கமாகக் கருத்துக்களைப் பரிமாறி வருவதாகக் கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )