வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வீடு தேடி வந்த விஜய்யின் நம்பிக்கை
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு பிரபல ஜோதிடர் ஒருவர் பூங்கொத்துடன் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் வெற்றிக்கான கணிப்புகள் மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க அவர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது விஜய் மற்றும் அவரது தொண்டர்களிடையே நிலவும் அசாத்திய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
விஜய் தனது இல்லத்திலிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் வாகனங்களில் பின்தொடர்வதைத் தவிர்க்கவும், விபத்துக்களைத் தடுக்கவும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
விதிகளை மீறி பின்தொடரும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இல்லம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அஞ்சல் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரங்களின் (EVM) ஆரம்பகட்டத் தகவல்கள்: 67 இடங்களில் முன்னிலை பெற்று தனது பலத்தை நிரூபித்து வருகிறது.
யாரும் எதிர்பாராத விதமாக 19 முதல் 25 இடங்கள் வரை முன்னிலை பெற்று, தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக சைதாப்பேட்டை மற்றும் சேலம் வடக்கு போன்ற தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
8 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் இந்த முறை பதிவான 85.1% வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரங்களில் பதிவான சுமார் 4.8 கோடி வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், மதியத்திற்கு மேல் தேர்தல் முடிவுகளில் இன்னும் பல அதிரடித் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
(வீடியோ இங்கே )