எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் முறைக்கேடு - மஹிந்தவுக்கு அழைப்பு!

#SriLanka #Mahindha #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் முறைக்கேடு - மஹிந்தவுக்கு அழைப்பு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 2013 ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகளை விசாரணை செய்யவே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி,மே மாதம் 12 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

 இது தொடர்பாக இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைவாக, சந்தேக நபரான கபில சந்திரசேன கடந்த மார்ச் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4