குழந்தைகளுக்கான முதல் மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

#Medical #Lanka4 #baby #Medicine #World #World Health Organization #malaria
Prasu
1 month ago
குழந்தைகளுக்கான முதல் மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

குழந்தைகளுக்கான முதல் மலேரியா சிகிச்சைக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், கண்டறியப்பட்ட தடுப்பூசியினை உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்த வழி திறக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், ஆறு மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளில் 18% வரை மலேரியாவால் பாதிக்கப்படுவார்கள், ஆனால் வரலாற்று ரீதியாக அவர்களில் மிகச் சிறியவர்களுக்கு பாதுகாப்பான சிகிச்சை எதுவும் இருந்ததில்லை.

2024ம் ஆண்டில் மலேரியாவால் 610,000 பேர் உயிரிழந்தனர், அவர்களில் சுமார் 3/4 பேர் ஆப்பிரிக்காவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலேரியாவால் பாதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கு இதுவரை மூத்த குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மருந்துக் கலவைகளே அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவை "மருந்தளவுப் பிழைகள், பக்க விளைவுகள் மற்றும் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4