தாய்லாந்திலிருந்து போதைப்பொருளை கடத்திய கும்பலை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர்கள் இன்று (02) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உத்தரவிற்கு அமைய வரும் 12 ஆம் திகதிவரை அவர்கள் விளகமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 25ஆம் திகதி நாட்டிற்குள் வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் 112 கிலோகிராம் 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' போதைப்பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அமிதானந்தா என்ற நபர் இந்த சட்டவிரோத செயலுக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. அதன்படி, கம்பஹா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பதுங்கியிருந்தபோது அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவர் நாளை (3) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )