வானிலையில் திடீர் மாற்றம் - சில பகுதிகளில் இடியுடன்கூடிய மழை!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலை வேளையில் தென் மாகாணம், களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும், கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேநேரம் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை , பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அபாயத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )