மூன்று பிரதேச செயலக விவசாயிகள் நிம்மதி! மாவிலாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்கு நீர் வெளியீடு.
#SriLanka
#water
#Lanka4
#Farmer
#Agriculture
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
திட்வா வெள்ளத்தால் சேதமடைந்திருந்த மாவிலாறு (Mavil Aru) பிரதான மதகு விரைவாக புனரமைக்கப்பட்டு, நேற்று (30) பெரும் போகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.
அல்ல விவசாயக் குடியிருப்புக்குச் சொந்தமான சுமார் 40,000 ஏக்கர் நெல் வயல்கள் இதன் மூலம் நீரைப் பெறுகின்றன. சேருவில, வெருகல் மற்றும் மூதூர் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 10,000 விவசாயக் குடும்பங்கள் இந்த நீர்த்தேக்கத்தை நம்பி விவசாயம் செய்கின்றன.
வெள்ளத்தால் அணைக்கட்டு முழுமையாக சேதமடைந்திருந்த போதிலும், பெரும் போகம் ஆரம்பமாவதற்கு முன்னரே பிரதான மதகு புனரமைக்கப்பட்டு விவசாயிகளுக்குத் தேவையான நீர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )