நாடளாவிய ரீதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு!

#SriLanka #Lanka4 #may day #Safety #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY
Thamilini
1 month ago
நாடளாவிய ரீதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தவுள்ளன. 

இந்நிலையில் இன்றைய தினம்  சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. 

 போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புப் பொறுப்பு வகிக்கும் காவல்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி.) டபிள்யூ.பி.ஜே. செனதீர, நிகழ்வுகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரிவான போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்காக அனைத்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. 

புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி, புலனாய்வு அதிகாரிகள் உட்பட பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். 

 “இந்த மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பங்கேற்பாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். 


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4