டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சி மீதான தாக்குதல் சதித்திட்டம் - குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆஸ்திரிய இளைஞர்
டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சி மீது தாக்குதல் நடத்துவதற்கான ஜிஹாதிகளின் சதித்திட்டம் தீட்டிய வழக்கில், 21 வயதான இளைஞர் ஒருவர் ஆஸ்திரிய நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த சதித்திட்டத்தின் காரணமாக, ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் அமெரிக்காவின் பெரும் நட்சத்திரமான டெய்லர் ஸ்விஃப்ட்டின் நிகழ்ச்சிகள் 2024ல் ரத்து செய்யப்பட்டன.
இந்த சதித்திட்டம் குறித்து அதிகாரிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து, 2024 கோடையில் ஸ்விஃப்ட்டின் சாதனை படைத்த "எராஸ்" சுற்றுப்பயணத்தின் மூன்று திகதிகள் ரத்து செய்யப்பட்டன.
வியன்னாவிற்கு வெளியே உள்ள வீனர் நியூஸ்டாட் நீதிமன்றத்தில், பயங்கரவாத குற்றங்கள் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையின் தொடக்கத்தில், பெரான் முகமூடி அணிந்த காவல்துறையினரால் நீதிமன்ற அறைக்குள் அழைத்து வரப்பட்டார்.
அந்த ஆஸ்திரியர், ஆகஸ்ட் 2024ல் கைது செய்யப்பட்டதிலிருந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )