சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு – என்ன காரணம்?

#SriLanka #prices #International #Lanka4 #Oil #Market #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு – என்ன காரணம்?

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவும் தொடர்ச்சியான மோதல்களால், உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக மசகு எண்ணெய்யின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் மசகு எண்ணெய்யின் விலையை நிர்ணயிக்கும் பிரெண்ட் ரக எண்ணெய் விலை, 106.80 டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த புதன்கிழமை முடிவடைந்த விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் 5% உயர்வாகும்.

கடந்த இரண்டு வாரங்களில் முதல் முறையாக எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஒன்றையொன்று குற்றம்சாட்டி, பரஸ்பரம் வர்த்தகக் கப்பல்களைக் கைப்பற்றி வருகின்றன. இதன் விளைவாக, ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.

உலகளவில் கடல் வழியாகக் கடத்தப்படும் மசகு எண்ணெய்யில் சுமார் 30% இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த விநியோகத் தடை காரணமாக, குறிப்பாக ஆசிய நாடுகளில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

சர்வதேச எரிசக்தி முகவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் இந்தத் தடையால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஒரு நாளைக்கு 10.1 மில்லியன் பீப்பாய்கள் வரை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4