மகனை இழந்த பிறகு தனது உயிரை மாய்த்துக்கொள்ள சுவிட்சர்லாந்து சென்ற பெண்
இங்கிலாந்தை சேர்ந்த, குணப்படுத்த முடியாத நோய் ஏதுமில்லாத தாயான வெண்டி டஃபி, தனது ஒரே மகனின் மரணத்தைத் தொடர்ந்து, பிறர் உதவியுடன் இறப்பதன் மூலம் தன் உயிரை மாய்த்துக்கொள்ள ஒரு சர்ச்சைக்குரிய முடிவை எடுத்துள்ளார்.
56 வயதான இவர், பிறர் உதவியுடன் இறப்பதற்கான சுவிஸ் இலாப நோக்கற்ற அமைப்பான பெகாசோஸில் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக 10,000 பவுண்டுகள் ($13,500) செலுத்தியுள்ளார்.
டஃபி உடல்நலம் நன்றாக இருக்கிறார். இந்த முடிவு ஒரு நோயிலிருந்து தப்பிப்பதற்காக எடுக்கப்பட்டதல்ல, மாறாக முதுமையின் காரணமாகத் தன் வாழ்க்கை தளர்வதற்கு முன்பே, தனது மரணத்தைத் தேர்ந்தெடுப்பதாகும்.
தான் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதாகவும், கண்ணியத்துடன் விடைபெற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் என் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். இது அனைவருக்கும் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் நான் இறக்க விரும்புகிறேன், அதைத்தான் நான் செய்யப் போகிறேன். நான் இறக்கும்போது என் முகத்தில் ஒரு புன்னகை இருக்கும், அதனால் தயவுசெய்து எனக்காக மகிழ்ச்சியடையுங்கள்" என்று டஃபி குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )